திருமணத் தடை நீக்கும் அற்புத பதிகம் / Remedies for obstacles of marriage
சைவ குரவர் நால்வர் அப்பர்,சுந்தரர்,திருநாவுக்கரசர்,மாணிக்கவாசகர் அவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்த பாடல்கள் எல்லாம் தேவாரம் என்று தொகுக்கப்பட்டுள்ளது. தேவாரம் பாடல்கள் நம் அன்றாட வாழ்வியலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாக அமைகிறது. ஒவ்வொரு பாடலும் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு தீர்வு தருவதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இந்த பதிகம்.
இந்த பதிகத்தை தினம்தோறும் படித்து வந்தால் எப்பேர்ப்பட்ட திருமணத் தடையையும் நீக்கி திருமணம் நடைபெறும் அமைப்பு உருவாகும். இந்த பதிகம் ஞான குழந்தை என்று போற்றப்படும் திருஞானசம்பந்தர் அருளியது. எந்த கஷ்டம் வந்தாலும், எந்த துன்பம் வந்தாலும் பதிகம் படிப்பதை மட்டும் நிறுத்தாதீர்கள்.
ஒரே பரிகாரத்தை பலபேர் செய்தாலும், எல்லோருக்கும் பலன் உடனே கிடைப்பதில்லை. அவரவர் வினைகளுக்கு ஏற்பவே பலன்களும் கிடைக்க நேரம்/காலம் எடுத்துக் கொள்ளும். எனவே விரக்தி அடையாமல் இறைவனை நம்பி அவன் மேல் பாரத்தை போட்டு விட்டு படிக்க ஆரம்பியுங்கள். இந்த பதிகம் படிப்பதற்கு நியமம் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.
இந்த பதிகம் படிக்க ஓரிரு நிமிடங்களே போதும். வீட்டிலிருந்தபடியே கூட படிக்கலாம் அல்லது சிவ சன்னதிகளிலும், மற்ற எந்த தெய்வ சன்னதியிலும் படிக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில், பதிகம் படிக்க ஆரம்பிக்கும் முன்னும் பதிகம் படித்த பின்னும் திருச்சிற்றம்பலம் என்று கண்டிப்பாக சொல்ல வேண்டும். அப்போதுதான் பதிகம் படித்த பலன் கிடைக்கும்.
திருச்சிற்றம்பலம்
1.
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே
2.
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே
3.
அறையார் கழலும் அழல்வா யரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய் யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே
4.
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே
5.
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே
6.
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே
7.
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே
8.
இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் இவளை அலராக் கினையே
9.
எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியா ததொர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே
10.
அறிவில் சமணும் அலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே
11.
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தன்பா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.
திருச்சிற்றம்பலம்
வேண்டுகோள்.
இந்த பதிகத்தை , திருமணமாகாத உங்கள் உறவினர்களுக்கோ , நண்பர்களுக்கோ, கீழே உள்ள Facebook, Twitter ஐகான் மூலம் ஷேர் செய்யுங்கள். அவர்களும் படித்து பயன் பெறட்டும் .